Wednesday 1st of May 2024 10:00:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழில் திரையரங்க ஊழியர்கள் எழுவர், போக்குவரத்து சபை பேருந்து சாரதி உள்ளிட்ட வடக்கில் 13 பேருக்கு தொற்றுறுதி!

யாழில் திரையரங்க ஊழியர்கள் எழுவர், போக்குவரத்து சபை பேருந்து சாரதி உள்ளிட்ட வடக்கில் 13 பேருக்கு தொற்றுறுதி!


யாழில் உள்ள திரையரங்க ஊழியர்கள் ஏழு பேர் மற்றும் போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் உள்ளடங்கலாக வடக்கில் மேலும் 13 பேருக்கு இன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் 11 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் இருவருக்குமாக வடமாகாணத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் மேலும் தெரிவிக்கையில் இத்தகவல்களை வழங்கியுள்ளார்.

யாழ். ஏழாலையைச் சேர்ந்த போக்குவரத்து சபை பேருந்து சாரதியாக கடமையாற்றும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று யாழில் உள்ள திரையரங்க ஊழியர்கள் 07 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE